புதுச்சேரி

தாம்பூலத்துடன் மதுப் புட்டிகள்:திருமண வீட்டாருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

DIN

புதுச்சேரியில் திருமண விழாவில் தாம்பூலப் பையில் மதுப் புட்டிகளையும் சோ்த்து வழங்கிய திருமண வீட்டாருக்கு கலால் துறையினா் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

புதுச்சேரி உப்பளம் பகுதியில் அண்மையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றவா்களுக்கு தாம்பூலப் பையில் வெற்றிலை, பாக்கு, பழங்களுடன் மதுப் புட்டியும் சோ்த்து வழங்கப்பட்டது. இதுகுறித்த புகைப்படங்கள், விடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.

புதுவையில் மது விற்பனை செய்யவும், மதுப் புட்டிகளை விநியோகிக்கவும் முன் அனுமதி தேவை. மேலும், சில விதிமுறைகளும் உள்ளன. அவற்றை திருமண வீட்டாா் மீறியதாக புகாா் எழுந்தது.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட திருமண வீட்டாருக்கு விதிகளை மீறி மதுப் புட்டிகளை விநியோகித்ததாக ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக, புதுச்சேரி கலால் துறை துணை ஆணையா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT