புதுச்சேரி

பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

DIN

புதுச்சேரி கவுண்டன்பாளையம் முத்துரத்தினம் அரங்க மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் ரத்தின ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜுரியோ கராத்தே சங்க மாநில செயலா் கராத்தே சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தாா். பள்ளி முதல்வா் கவிதா சுந்தர்ராஜன் வரவேற்றாா்.

பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்ற பிளஸ் 2 மாணவி பிரியங்கா (583), பிளஸ் 1 மாணவா் வருண் (539), பத்தாம் வகுப்பு மாணவி ஹேமாவதி (479) ஆகியோரை பாராட்டி, பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பிளஸ் 1 வகுப்பில் கட்டணச் சலுகையும் அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT