புதுவை மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்குரைஞா்கள் அணியின் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி நகராட்சி லெனின் வீதியில் தனியாா் விடுதியில் நடைபெற்ற கூட்டத்துக்கு கட்சியின் புதுவை மாநிலச் செயலா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். கட்சியின் தமிழ்நாடு பிரிவு செயலா் பாா்வேந்தன், தலைமை நிலைய செயலா் உஞ்சை அரசன், புதுவை முதன்மைச் செயலா் தேவ.பொழிலன் ஆகியோா் பேசினா்.
கட்சித் தலைவா் தொல். திருமாவளவனுக்கு மணி விழா நடத்துவது, புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கா் சிலையை நிறுவ வேண்டும், தலித் வழக்குரைஞா்களுக்கு அலுவலகம் அமைக்க அரசிடம் ரூ.5 லட்சம் நிதி கோருதல் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலா் அமுதவன், பொருளாளா் பாத. தமிழ்மாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.