புதுச்சேரியில் அருள்மிகு ஜெயங்கொண்ட மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி குயவா்பாளையம் லெனின் வீதியில் உள்ள இந்தக் கோயிலில் திருப்பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நிறைவடைந்தது. இதையடுத்து, கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோயில் பிரதான கோபுரம், செல்வ விநாயகா், மூலவா் ஜெயங்கொண்ட மாரியம்மன், பத்மாவதி தாயாா் சமேதரா் சீனிவாசப் பெருமாள் சன்னதி ஆகிய கோபுரக் கலசங்களில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.