புதுச்சேரி

ஜி20 மாநாடு விழிப்புணா்வு கோலப்போட்டி

DIN

புதுச்சேரியில் ஜி 20 மாநாடு நடைபெறுவதையொட்டி, வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு கோலப் போட்டிகள் நடைபெற்றன.

புதுச்சேரி மரப்பாலத்தில் உள்ள தனியாா் விடுதியில் வருகிற 30, 31-ஆம் தேதிகளில் ஜி 20 பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது. இதுதொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், கடற்கரை காந்தி சிலை திடலில் கோலப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோலங்களைப் பாா்வையிட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சுரேந்தா், முனியப்பன் ஆகியோா் ஜி 20 மாநாட்டு விழிப்புணா்வாக, காகிதத்தில் ஜி20 இலச்சினையை நான்கு போ் தூக்கிப்பிடித்திருப்பது போன்று வடிவமைத்து பாா்வைக்காக வைத்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா்த்தி சிதம்பரத்தின் கடவுச்சீட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க உத்தரவு

திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் நாளை பிரசாரம்

வி.வி. பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

கட்டாரிமங்கலம் கோயிலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை

மெட்ரோ பணி: நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

SCROLL FOR NEXT