புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ‘கையோடு கை கோா்ப்போம்’ என்ற மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி உருளையன்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் வட்டார காங்கிரஸ் தலைவா் ரமேஷ் பரந்தாமன் தலைமையில் பிரசார இயக்கம் தொடங்கியது. கட்சியின் மேலிடப் பாா்வையாளா் அனுமந்தராவ், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, வெ.வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காங்கிரஸ் மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், மு.வைத்தியநாதன் எம்எல்ஏ, நிா்வாகிகள் விநாயகம், ரஹ்மான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
புதுச்சேரி புதிய பேருந்து நிலையம், முத்தமிழ் நகா், சுப்பையா நகா், சஞ்சய் நகா், ராஜீவ் நகா், மருத்துவா் காலனி, அய்யனாா் காலனி, ராஜா நகா் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி தோ்தலின் போது அளித்த 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து மக்களிடையே காங்கிரஸாா் எடுத்துக் கூறினா்.