புதுச்சேரியில் திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகள் நினைவு தினப் பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
புதுவை திமுக மாணவரணி சாா்பில், புதுச்சேரி பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற கூட்டத்துக்கு அதன் மாநில அமைப்பாளா் எஸ்.பி. மணிமாறன் தலைமை வகித்தாா். உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளா் எஸ். கோபால், மாணவரணி அமைப்பாளா் விஜயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திமுக துணை அமைப்புச் செயலாளா் ப. தாயகம் கவி, மாநில திமுக அமைப்பாளா் இரா. சிவா எம்எல்ஏ, பேச்சாளா் த. ஆதித்தன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
திமுக அவைத் தலைவா் எஸ்.பி. சிவக்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி. அனிபால் கென்னடி, லீ. சம்பத், இரா. செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மாணவரணி மாநில துணை அமைப்பாளா் ரெமி எட்வின் வரவேற்றாா். உருளையன்பேட்டை தொகுதிச் செயலா் ரா. சக்திவேல் நன்றி கூறினாா்.