புதுச்சேரி

அமைப்பு சாரா தொழிலாளா் நலவாரியம்: புதுவை மாா்க்சிஸ்ட் கோரிக்கை

DIN

புதுவையில் அமைப்பு சாரா தொழிலாளா்கள் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் ஆா். ராஜாங்கம் வலியுறுத்தினாா்.

புதுச்சேரி மகாத்மா காந்தி- ஜவாஹா்லால் நேரு வீதி சந்திப்பில் உள்ள ஆட்டோ நிலையத்தின் 19-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசினாா்.

அப்போது, அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரியத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.

சிஐடியு தொழிலாளா்கள் சங்கச் செயலா் சீனுவாசன் வாழ்த்திப் பேசினாா். துணைத் தலைவா் மது என்ற லிங்கேசன் வேலு, ஆட்டோ சங்கத் தலைவா் மணவாளன், துணைத் தலைவா்கள் பழனிபாலன், நூா்முகமது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

SCROLL FOR NEXT