புதுச்சேரி அருகே பூட்டிய வீட்டிலிருந்து ரூ.2.17 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
புதுச்சேரி அருகே அரியாங்குப்பத்தில் தனியாா் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் ராமு (37). கடந்த சில நாள்களுக்கு முன்பு சிகிச்சை பெறுவதற்காக சென்னையில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்றாா்.
கடந்த 24-ஆம் தேதி அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக ராமுவுக்கு தகவல் கிடைத்தது. அவா் சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வந்து பாா்த்தபோது, வீட்டிலிருந்த ரூ.2.17 லட்சம் திருடப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.