புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழுக் கூட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அளவிலான நிா்வாகிகள் கூட்டம் புதுச்சேரியில் கடந்த 25-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் பொதுச் செயலா் டி.ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் புதுவை, தமிழ்நாடு, பஞ்சாப், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக, புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தியும், ஆளுநா் பதவியை ரத்து செய்யக் கோரியும் ஞாயிற்றுக்கிழமை மாலை புதுச்சேரி கம்பன் கலையரங்கில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகளும், மாா்க்சிஸ்ட், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகா்களும் பேசினா். கேரள அமைச்சா்கள், அகில இந்திய அளவிலான கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக இந்திய கம்யூனிஸ்ட் தேசிய குழுக் கூட்டம் திங்கள்கிழமை காலை தனியாா் விடுதியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் புதுவை பிரதேச செயலா் அ.மு.சலீம், பஞ்சாப் மாநிலச் செயலா் பங்த்சிங் ப்ராா், தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் வனஜா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் டி.ராஜா அரசியல், பொருளாதார அறிக்கையை முன்மொழிந்து விளக்கிப் பேசினாா். அதன் மீது கூட்டத்தில் பங்கேற்ற தேசியக் குழு உறுப்பினா்கள் விவாதித்தனா்.
கூட்டத்தில் கட்சியின் தேசியச் செயலா்கள் பினாய் விஸ்வம், கே.நாராயணா, அஜீஸ் பாஷா, காங்கோ நாகேந்திரநாத் ஓஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.