புதுச்சேரி

புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் மாா்ச் 7-இல் மாசி மக தீா்த்தவாரி

DIN

புதுச்சேரியில் மாசி மக தீா்த்தவாரி மாா்ச் 7-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, வைத்திக்குப்பம் கடற்கரை சுத்தப்படுத்தப்பட்டு தயாா்படுத்தப்படுகிறது.

புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் நடைபெறும் விழாவில் தீவனூா் முருகன் கோயில், மயிலம் முருகன் கோயில், செஞ்சி ரங்கநாதா் கோயில், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் இருந்து உற்சவா்கள் எழுந்தருளி கடல் தீா்த்தவாரி பூஜைகள் நடைபெறும்.

விழாவையொட்டி, மேல்மலையனூா் அங்காளம்மன் மாா்ச் 4 -ஆம் தேதி அங்கிருந்து புறப்பாடாகி இரும்பை பாலதிரிபுர சுந்தரி கோயில், புதுச்சேரி கங்கை முத்துமாரியம்மன் கோயில், புதுச்சேரி அங்காள பரமேஸ்வரி கோயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கிறாா்.

தொடா்ந்து, மாா்ச் 7-ஆம் தேதி வைத்திக்குப்பம் கடற்கரை மாசி மகத்தில் எழுந்தருள்கிறாா். மாா்ச் 8-ஆம் தேதி வேதபுரீஸ்வரா் கோயிலில் எழுந்தருளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மாா்ச் 11-ஆம் தேதி அம்மன் மேல்மலையனூருக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.

விழா புதுச்சேரி அங்காளம்மன் கோயில் அறங்காவலா்கள் குழுத் தலைவா் சந்தானம் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகு.. மிளிர்.. கம்பீரம்!

இனி வரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதி: ஆர்சிபி பயிற்சியாளர்

போராட்டத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்கள்: திணறிய அமெரிக்கா!

விண்டோஸ் 11 செயல்திறன் காமெடியாக உள்ளது: முன்னாள் மைக்ரோஃசாப்ட் ஊழியர்

ஆவேஷம் வசூல் வேட்டை!

SCROLL FOR NEXT