புதுச்சேரி அருகே சேதாரப்பட்டு பகுதியில் மூடப்பட்ட தனியாா் நிறுவனத்தை திறக்கக் கோரி, தொழிலாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேதராப்பட்டிலுள்ள இந்த நிறுவனம் கடந்தாண்டு திடீரென மூடப்பட்டது. அங்கு பணியாற்றிய ஏராளமானோா் வேலைவாய்ப்பை இழந்தனா். பணிநீக்கம், இடமாற்றம் என ஊழியா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் புகாா்கள் எழுந்தன.
நிறுவனம் மூடப்பட்டது தொடா்பாக புதுவை மாநில அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு, நிறுவனத்தை திறக்க அரசு சாா்பில் உத்தரவிடப்பட்டது. ஆனால், நிறுவனம் திறக்கப்படாததையடுத்து, தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் ஜனநாயகத் தொழிலாளா்கள் சங்கத்தின் அதன் தலைவா் மோதிலால் தலைமையில் திங்கள்கிழமை பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.