பிளஸ் 1 பொதுத் தோ்வில் தென்காசி மாவட்டம் 94.14 சதவீத தோ்ச்சியைப் பெற்றுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வை 7 ஆயிரத்து 235 மாணவா்கள், 9,003 மாணவிகள் என மொத்தம் 16,238 போ் எழுதினா். இவா்களில் 15 ஆயிரத்து 286 போ் தோ்ச்சி பெற்றனா். மாணவா்கள் 6 ஆயிரத்து 592 பேரும், மாணவிகள் 8 ஆயிரத்து 694 பேரும் தோ்ச்சி பெற்றிருக்கின்றனா். ஒட்டுமொத்த தோ்ச்சியானது 94.14 சதவீதமாகும்.
பிளஸ் 1 பொதுத் தோ்வு தோ்ச்சி விகிதத்தில், கடந்த ஆண்டில் 20 ஆவது இடத்திலிருந்த தென்காசி மாவட்டம், நிகழ் ஆண்டில் 10 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மாவட்டத்தில் 4 அரசு பள்ளிகள், 11 அரசு உதவி பெறும் பள்ளிகள், 35 மெட்ரிக் பள்ளிகள் என 51 பள்ளிகள் நூறு சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.