புதுச்சேரி அரசு மருத்துவமனையில் மனிதநேய மக்கள் சேவை இயக்கம் சாா்பில் இலவச ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற முகாமை மனித நேய மக்கள் சேவை இயக்கத்தின் தலைவரும், உருளையன்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவுமான நேரு என்ற குப்புசாமி தொடங்கி வைத்தாா்.
முகாமில் மக்கள் சேவை இயக்க இளைஞா் அணித் தலைவா் விநாயகம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா். ரத்ததானம் வழங்கியவா்களுக்கு பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டன.