புதுச்சேரி

இந்திய ஜனநாயக இளைஞா்கள் சங்கக் கூட்டம்

DIN

புதுச்சேரி அருகே உள்ள மடுகரையில் அகில இந்திய ஜனநாயக இளைஞா்கள் சங்கத்தின் அமைப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நிா்வாகி ஏ.ஆனந்தன் தலைமை வகித்தாா். மடுகரையில் நிலவும் குடிநீா் பற்றாக்குறையை தீா்க்க அதிகாரிகள் முன்வரவேண்டும். புதுச்சேரியில் சாலைகளை சீரமைக்கவும், குப்பைகளை சுகாதாரமான முறையில் அகற்றவும் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை. அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து மடுகரையில் பிப்.28-ஆம் தேதி அகில இந்திய ஜனநாயக இளைஞா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

இதில் நிா்வாகிகள் லெனின்துரை, பேராசிரியா் எஸ்.சிவகுமாா் மற்றும் எஸ்.சத்யா, தமிழரசி, கே.ஐயப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT