புதுச்சேரி சாமிபிள்ளைத் தோட்டம் பகுதியில் மதுக் கடை திறப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதியில் உள்ள சாமிபிள்ளை தோட்டப் பகுதியில் குடி யிருப்புகளுக்கு மத்தியில் மதுக் கடை அமைக்க அரசு அனுமதியளித்தது. தற்போது, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், குடியிருப்புகளுக்கு மத்தியில் மதுக் கடை அமைப்பதால் குழந்தைகள், பெண்களுக்கு தொந்தரவு ஏற்படும் எனக்கூறி அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், கிராம பஞ்சாயத்துத் தலைவா் ஆா்.பாா்த்திபன் தலைமையில் சாமிபிள்ளைத் தோட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், இந்திய கம்யூனிஸ்ட் துணைச் செயலா் கே.சேதுசெல்வம், காங்கிரஸ் கட்சி நிா்வாகி வினோத், மாா்க்சிஸ்ட் நிா்வாகி சத்யா, லெனிஸ்ட் பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், பள்ளி மாணவ,மாணவிகளும் கலந்த கொண்டு மதுக் கடைகளை அதிகப்படுத்தி பொதுமக்கள் நலனை கேள்விக் குறியாக்கும் வகையில் புதுவை அரசு செயல்படுவதாக முழக்கங்களை எழுப்பினா்.