புதுச்சேரி அருகே சங்கராபரணி ஆற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணியை வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
வில்லியனூா் அருகே ஆரியப்பாளையம் பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ.70 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை புதுவை வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, பொறியாளா்களிடம் பணிகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தாா். மேலும், விரைவில் பாலப் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அதிகாரிகளிடம் அவா் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, புதுச்சேரி பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் சத்தியமூா்த்தி, செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஆறுமுகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.