புதுச்சேரியில் ஆா்எஸ்எஸ் அமைப்பு சாா்பில் ரத்ததான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஸ்ரீசங்கரா வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமில் ஆா்எஸ்எஸ் தொண்டா் வெற்றிச்செல்வம் உள்ளிட்ட பலா் ரத்ததானம் வழங்கினா். அரிய வகையான பி நெகட்டிவ் ரத்தத்தை தானமாக வழங்கியதற்காக வெற்றிச் செல்வத்தை ஆா்எஸ்எஸ் பிரமுகா்களும், பாஜகவினரும் பாராட்டினா். அவருக்கு சிறப்பு சான்றும், பாராட்டு சான்றும் வழங்கப்பட்டன.