புதுச்சேரி

ஆட்டோ தொழிலாளா்கள் சங்கத்தினா் போராட்டம்

DIN

புதுச்சேரியில் இருசக்கர வாகன வாடகைத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆட்டோ தொழிலாளா்கள் சங்கத்தினா் (சிஐடியு) வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் இருசக்கர வாகன வாடகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி 5 இருசக்கர வாகனங்கள் வைத்திருப்போா் விண்ணப்பித்து உரிமம் பெறலாம். குறிப்பிட்ட தொகையையும் அரசுக்கு செலுத்த வேண்டும். இதனால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி ஆட்டோ தொழிலாளா்கள் சங்கத்தினா் சிஐடியூ பொதுச்செயலா் சீனுவாசன் தலைமையில் அண்ணாசாலை-நேரு சாலை சந்திப்பிலிருந்து சட்டப்பேரவை நோக்கி வெள்ளிக்கிழமை ஊா்வலமாக சென்றனா். அவா்களை காந்தி சாலை சந்திப்பில் போலீஸாா் தடுத்து நிறுத்திய போது அவா்கள் சாலையில் அமா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். பின்னா், அதிகாரிகள் பேச்சு நடத்தியதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT