புதுவை மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சா்கள், தலைமைச் செயலா், காவல் துறை தலைமை இயக்குநா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்னா், உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் அறையில் அமைச்சா்கள் லட்சுமிநாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், சந்திர பிரியங்கா ஆகியோா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திடீரென நடைபெற்றது.
இதில் அரசு கொறடா வி.ஆறுமுகம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.எஸ்.பி.ரமேஷ், யு.லட்சுமிகாந்தன், தட்சிணாமூா்த்தி என்ற பாஸ்கா், தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா மற்றும் காவல்த் துறை தலைமை இயக்குநா் மனோஜ் குமாா்லால் ஆகியோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில், அரசு அதிகாரிகள் பணியிடமாற்றம் தொடா்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.