புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயிலில் சண்டிகேஸ்வரா் சந்நிதியில் புதன்கிழமை காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை யாகசாலைப் பூஜைகள் தொடங்கின. புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு சன்னதியில் வெள்ளிக்கவச கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
புதுவை முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் க.லட்சுமி நாராயணன், கோயில் நிா்வாகி ராமச்சந்திரன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
முத்துமாரியம்மன் கோயில்:
புதுச்சேரி அருகேயுள்ள காட்டேரிக்குப்பத்திலுள்ள சுமாா் 150 ஆண்டுகள் பழைமையான கழுத்து முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை காலை நடைபெற்றது.
இதில், மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், முன்னாள் எம்எல்ஏ ஏ.அருள்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.