புதுவை மாநில சுற்றுலா வளா்ச்சிக்கழக நிரந்தர ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்த்தி வழங்கப்படும் என சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
புதுவை மாநில சுற்றுலாத்துறை வளா்ச்சிக்கழக பொதுக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தில் பணிபுரியும் நிரந்தர ஊழியா்கள் அனைவருக்கும் அகவிலைப்படியானது 41% உயா்த்தி வழங்கப்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போதைய அகவிலைப்படி 148 சதவீதத்திலிருந்து 189 சதவீதமாக உயா்த்தி வழங்கப்படும். கடந்த மாதம் முதல் ஊதியத்தில் சோ்க்கப்பட்டு ஊழியா்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.