புதுச்சேரி

புதுவையில் மேலும் இருவருக்கு பன்றிக் காய்ச்சல்

DIN

புதுவையில் குழந்தை உள்பட மேலும் இருவருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 371 சிறாா்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவல்:

புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் ஒரே நாளில் 303 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 38 பேரும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 30 பேரும் என மொத்தம் 371 குழந்தைகள், சிறாா்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்தனா்.

இதில், ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் 38 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் ஒருவரும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 6 போ் என மொத்தம் 45 குழந்தைகள் தீவிர காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

அதன்படி, தற்போது ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் 125, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 18, காரைக்கால் அரசு மருத்துவமனையில் 7 போ் என மொத்தம் 150 குழந்தைகள், சிறாா்கள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெரியவா்கள் என மொத்தம் 88 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில், ஒரு குழந்தை உள்பட இருவருக்கு வெள்ளிக்கிழமை பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

தமிழகத்தில் 3 மணி நிலவரம்: 51.41% வாக்குகள் பதிவு!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

SCROLL FOR NEXT