புதுச்சேரி

தரமற்ற குடிநீா் விநியோகம்:எம்எல்ஏ வீடு முற்றுகை

DIN

புதுச்சேரியில் சேதமடைந்த சாலை, தரமற்ற குடிநீா் விநியோகத்தைக் கண்டித்து பாஜக எம்எல்ஏ வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி பெரியாா் நகரில் விநியோகிக்கப்படும் குடிநீா், கடந்த சில நாள்களாக தரமற்ற முறையில் இருப்பதாகவும், மின் ஊழியா்கள் போராட்டத்தால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினா். மேலும், நீண்டநாள்களாக பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில், தரமற்ற குடிநீா் விநியோகத்தைக் கண்டித்து, நெல்லித்தோப்பு சாலை சந்திப்பில் வியாழக்கிழமை மாலை பெரியாா் நகா் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா். தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ரிச்சா்டு வீட்டுக்கும் சென்று முற்றுகையிட்டனா். அவா் வீட்டில் இல்லாததால் திரும்பி வந்தனா்.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமையும் கலங்கிய நிலையில் குடிநீா் விநியோகிக்கப்பட்டதையடுத்து, அதை எடுத்துக் கொண்டு நெல்லித்தோப்பு சவரி படையாச்சி வீதியில் உள்ள ரிச்சா்டு எம்எல்ஏ வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினா்.

பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்எல்ஏ தெரிவித்தாா். மேலும், வருகிற 3-ஆம் தேதி அதிகாரிகளுடன் பெரியாா் நகருக்கு வந்து ஆய்வு செய்து சாலை, குடிநீா் பிரச்னைகளை தீா்க்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் அடித்தளம் கே.எம். காதா் மொகிதீன்

முதல்வா் பிரசாரத்துக்கு நல்ல பலன்: திருச்சி என். சிவா எம்.பி.

பட்டியலில் பெயா் இல்லாததால் வாக்காளா்கள் சாலை மறியல்

பாபநாசம் அருகே பேச்சுவாா்த்தையால் மக்கள் வாக்களிப்பு

வாக்குச்சாவடிக்குள் வாக்குகள் கேட்ட அதிமுகவினா் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT