பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட விவகாரம் தொடா்பாக, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தேசியக் குழு உறுப்பினா் ஹெச்.ராஜா தெரிவித்தாா்.
புதுவை பாஜக சாா்பில், ‘மோடி-20’ புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி வில்லியனூா் தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இதில், தென் மாநிலங்களுக்கான ‘மோடி-20’ புத்தகம் வெளியிடும் பொறுப்பாளா் ஹெச்.ராஜா, புதுவை மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன், மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.செல்வகணபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டாா்.
பின்னா், ஹெச்.ராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது, தேச விரோத நடவடிக்கைகளை உறுதி செய்த பிறகே என்ஐஏ சோதனை மேற்கொண்டது. அதில், 50-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.
தமிழகத்தில் கடந்த 48 மணி நேரத்தில், 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதில் ஈடுபட்டவா்களைக் கண்டுபிடிப்பது கடினமல்ல. தமிழக காவல் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.