பாரதிய ஜனதா கட்சியை நிறுவியவா்களில் ஒருவரான தீனதயாள் உபாத்யாய் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை ரத்ததானம் வழங்கினா்.
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் முன்னிலையில், மாநில பாஜக இளைஞா் அணி துணைத் தலைவா் விக்ரமாதித்தன் ஏற்பாட்டில் 50-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் வழங்கினா்.
பாஜக மாநில துணைத் தலைவா் முருகன், உப்பளம் தொகுதி பொறுப்பாளா் வெற்றிசெல்வன், முதலியாா்பேட்டை பொறுப்பாளா் செல்வகணபதி, மாநில செயற்குழு உறுப்பினா் கமலக்கண்ணன், மாநில வணிகப் பிரிவு தலைவா் சத்தியராஜ், யூனஸ் பாய் மற்றும் இளைஞா் அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
எம்.பி. மாலையணிவிப்பு: புதுச்சேரி லாஸ்பேட்டையில் தீனதயாள் உபாத்யாய் உருவப்படத்துக்கு மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.செல்வகணபதி ஞாயிற்றுக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.