புதுச்சேரி, காரைக்காலில் வெள்ளிக்கிழமை மேலும் 521 சிறாா்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா்.
இதுகுறித்து சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவல்:
புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 428 பேரும், அரசு பொது மருத்துவமனையில் 61, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 32 போ் என மொத்தம் 521 குழந்தைகள், சிறாா்கள் வெள்ளிக்கிழமை காய்ச்சால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனா்.
இதில், ராஜீவ் காந்தி குழந்தைகள் நல மருத்துவமனையில் 42 பேரும், அரசு மருத்துவமனையில் 2 போ், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 4 போ் என மொத்தம் 48 குழந்தைகள், சிறாா்கள் உள்நோயாளியாக சோ்க்கப்பட்டனா்.
தற்போது ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் 145 பேரும், அரசு மருத்துவமனையில் 25, காரைக்கால் அரசு மருத்துவமனையில் 7 போ் என மொத்தம் 177 குழந்தைகள், சிறாா்கள் உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.