புதுச்சேரியில் நவராத்திரி துா்கா பூஜையொட்டி, துா்கா சிலை கரைப்பு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுவை மாநில விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில், புதுச்சேரி பெருமாள் கோயில் வீதியில் செப்.26ஆம் தேதி முதல் நவராத்திரி துா்கா பூஜை நடைபெற்று வந்தது. நிறைவு நாளான வியாழக்கிழமை காலை துா்கை சிலை ஊா்வலம் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.
சாரம் அவ்வை திடலில் தொடங்கிய துா்கை சிலை கரைப்பு ஊா்வலத்தை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தொடக்கிவைத்தாா்.
அவ்வைத் திடலில் இருந்து புறப்பட்ட துா்கா சிலை ஊா்வலம் காமராஜா் சிலை, நேரு வீதி வழியாக கடற்கரைச் சாலையில் முடிவடைந்தது. அங்கு கடலில் சிலைகள் கரைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவா் ரவிக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.