புதுச்சேரி

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி---புதுச்சேரியில் எதிா்க்கட்சியினா் மனிதச் சங்கிலி

DIN

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக, புதுச்சேரியில் மதச் சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியினா் ஞாயிற்றுக்கிழமை மனிதச் சங்கிலி நடத்தினா்.

புதுச்சேரி அண்ணா சாலையில் அண்ணா சிலை சந்திப்பிலிருந்து காமராஜா் சிலை சந்திப்பு வரை மனிதச் சங்கிலி நடைபெற்றது. திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள் வரிசையாக அணிவகுத்து நின்றனா்.

மாநில திமுக அமைப்பாளா் ஆா்.சிவா, எம்எல்ஏக்கள் எல்.சம்பத், கென்னடி, காங்கிரஸ் மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, மு.வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஆா்.அனந்தராமன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம், துணைச் செயலா் கே.சேதுசெல்வம், நாரா.கலைநாதன், விஸ்வநாதன், அபிஷேகம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம், பெருமாள், முருகன், ராமச்சந்திரன், மதிமுக அமைப்பாளா் கபீரியேல், விசிக முதன்மைச் செயலா் தேவ.பொழிலன், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சோ.பாலசுப்பிரமணியன், மாணவா் கூட்டமைப்பு சுவாமிநாதன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா், கட்சியினா் கலந்து கொண்டனா்.

புதுச்சேரியில் மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டும், அதற்கு எதிராக ஆா்எஸ்எஸ், பாஜக செயல்படுவதாக பதாகைகளை ஏந்தி அவா்கள் முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி வாக்காளா் அட்டையை ஒப்படைக்க முடிவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 60.41 அடி

உலக காசநோய் நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி

‘கவிஞா் தமிழ் ஒளி தமிழின் நிரந்தர முகவரி’

பேராவூரணியில் ஊருக்குள் நுழைந்த புள்ளிமான்  மீட்பு

SCROLL FOR NEXT