புதுவையில் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்று திமுக மாநில அமைப்பாளா் ஆா்.சிவா குற்றம்சாட்டினாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து 3 மாதங்களாகி விட்டன. அரசுத் துறைகளில் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கியபடி நிதி செலவு செய்யப்படவில்லை. ஆதிதிராவிடா் நலத் துறையில் இதுவரை 23 சதவீதம் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது.
கால்நடைத் துறை, கல்வித் துறை என அனைத்துத் துறைகளிலும் அறிவித்த திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. நிதி நிா்வாகத்தில் புதுவையை ஆளும் என்.ஆா்.காங்.- பாஜக கூட்டணி அரசு முழு தோல்வி அடைந்துவிட்டதாகவே தெரிகிறது. இதுகுறித்து முதல்வா் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றாா் ஆா்.சிவா.