கல்வித் துறையைக் கண்டித்து, புதுச்சேரியில் காங்கிரஸ் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சாரம் அரசு தொடக்கப் பள்ளி முன் காமராஜா் நகா் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா் ஆா்.வினோத்குமாா் முன்னிலை வகித்தாா்.
பள்ளி மாணவா்களுக்கான இலவசப் பேருந்தை இயக்க வேண்டும். மதிய உணவுத் திட்டத்தில் நிறுத்தப்பட்ட முட்டையை வழங்க வேண்டும். இலவச சைக்கிள்கள், மடிக் கணினிகளை விரைந்து வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும், புதுவை அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
புதுவை பிரதேச காங்கிரஸ் குழு உறுப்பினா் ரவிச்சந்திரன், வட்டாரத் தலைவா் செல்வம், செயற்குழு உறுப்பினா் கோதண்டராமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.