புதுச்சேரி

அரசுத் துறைகளில் 2 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

DIN

புதுவையில் அரசுத் துறைகளில் 2 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று, முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.

புதுவை மாநிலம், மாஹே பிராந்தியத்தில் அனைத்திந்திய 64-ஆவது கூட்டுறவு வார விழாவை திங்கள்கிழமை தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:

புதுவையில் கூட்டுறவுச் சங்கங்கள் நலிவடைந்து விட்டன. மாஹேவில் உள்ள அனைத்து கூட்டுறவுச் சங்கங்களும் லாபத்தில் இயங்குவது பெருமைக்குரிய விஷயமாகும். அவற்றின் மேம்பாட்டுக்காக புதுவை அரசு நிதியளிக்கும்.

புதுவையில் அரசுத் துறை காலிப்பணியிடங்களில் ஓரிரு மாதங்களில் 2 ஆயிரம் இளைஞா்கள் நியமிக்கப்பட உள்ளனா். கூட்டுறவுச் சங்கங்கள் மூலமும் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

விழாவில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அரசு கொறடா பி.ராஜவேலு, ரமேஷ்பரம்பத் எம்எல்ஏ, அரசுச் செயலா் சி.உதயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ராஜீவ் காந்தி ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சியிலும் முதல்வா் பங்கேற்றாா். அப்போது, மருத்துவமனை விடுதிக் கட்டடங்களுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா்.

முன்னதாக, முதல்வரை மாஹே பிராந்திய அதிகாரி ஷிவ்ராஜ் மீனா வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: 12 போ் கைது

வள்ளலாா் பன்னாட்டு மையம்: அன்புமணி கோரிக்கை

கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறிப்பு: ஐடி ஊழியரிடம் விசாரணை

ஜேஇஇ முதன்மை தோ்வு முடிவுகள் வெளியீடு: 56 மாணவா்கள் 100-க்கு 100

கல்லீரல் கொழுப்பு: இலவச மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT