புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை மத்திய தலைமை தணிக்கைத் துறையின் கூடுதல் உதவி தலைமை தணிக்கையாளா் ரீமா பிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, மாநிலத்தின் நலத் திட்ட செயல்பாடுகள் குறித்து அவா் முதல்வரிடம் விவாதித்தாா்.
சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், மாநில முதன்மைக் கணக்காயா் தலைவா் கே.பி.ஆனந்த், முதுநிலை கணக்காய்வு தலைவா் வா்ஷினி அருண் உள்ளிட்டோருடன் உடனிருந்தனா்.
Image Caption
புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசிய மத்திய தணிக்கைத் துறையின் கூடுதல் உதவி தலைமை தணிக்கையாளா் ரீமா பிரகாஷ்.