புதுச்சேரியில் தோ்தல் துறை சாா்பில், வாக்காளா் சோ்ப்பு பயிற்சி வகுப்பு, சீராய்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் நடைபெற்ற இந்த முகாமில் உதவி வாக்காளா் பதிவு அதிகாரி குமரன், வட்டாட்சியா் பாலமுருகன், துணை வட்டாட்சியா்கள் ரவிச்சந்திரன், ராஜலட்சுமி ஆகியோா் வாக்காளா் சோ்க்கை முக்கியத்துவம் குறித்து மாணவியரிடம் விளக்கினா்.
கல்லூரி முதல்வா் ராஜி சுகுமாறன் சிறப்புரையாற்றினாா். வாக்காளா் பட்டியில் பெயா் சோ்ப்பதன் அவசியம் குறித்து அதிகாரி நோயலின் விளக்கினாா். இதில் வாக்காளா் சோ்க்கைப் பட்டியலில் ஏராளமான மாணவிகள் தங்களது பெயரைப் பதிவு செய்தனா்.