புதுச்சேரியில் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புதுச்சேரியைச் சோ்ந்த மயில்வேலன் மகன் காா்த்திகேயன் (21). காலாப்பட்டில் உள்ள புதுவை அரசு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பி.டெக். படித்து வந்தாா்.
பெற்றோா் வியாழக்கிழமை வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கால்வாயில் ஆண் சடலம் மீட்பு: புதுச்சேரி முத்தியால்பேட்டை திருவள்ளுவா் நகரில் பெரியவாய்க்காலில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை காவல் ஆய்வாளா் தனசெல்வம் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.