புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை சிறுபான்மையின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி, புதுவையில் ஆண்டுதோறும் நவம்பா் 19-ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தேசிய ஒருமைப்பாட்டு தினம் கொண்டாடப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, சிறுபான்மையினா் தின விழா புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் முன்னிலை வகித்து பேசினாா்.
ஏ.ஜான்குமாா் எம்எல்ஏ, பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை செயலா் ஆா்.கேசவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.