புதுச்சேரி

புதுவை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விரைவில் மிதிவண்டி, மடிக் கணினிகள்: முதல்வா் என்.ரங்கசாமி

15th Nov 2022 03:08 AM

ADVERTISEMENT

புதுவையில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓரிரு மாதங்களில் விலையில்லா மிதிவண்டி, மடிக் கணினிகள் வழங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், புதுச்சேரி காமராஜா் மணிமண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பங்கேற்ற அவா், பல்வேறு போட்டிகள், நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கிப் பேசியதாவது:

புதுவையில் தரமான கல்வியை மாநில அரசு அளித்து வருகிறது. உயா் கல்வியை சிறப்பாகவும், குறைந்த செலவிலும் பெறும் வகையில் புதுவையில் உள்கட்டமைப்புகளை அரசு ஏற்படுத்தியது.

புதுவையில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓரிரு மாதங்களில் மிதிவண்டிகள் வழங்கப்படும். பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு மடிக் கணினிகளும் வழங்கப்படும் என்றாா் முதல்வா் என்.ரங்கசாமி.

ADVERTISEMENT

விழாவில், மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.செல்வகணபதி வாழ்த்திப் பேசினாா். தொடக்கக் கல்வித் துறை துணை இயக்குநா் பூபதி வரவேற்றாா். பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் சிவகாமி நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT