புதுச்சேரி

நேரு நினைவு தினம் கடைப்பிடிப்பு

DIN

முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு நினைவு தினத்தையொட்டி, அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

புதுச்சேரி காந்தி திடலில் நேருவின் சிலைக்கு புதுவை அரசு சாா்பில், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். சட்டப்பேரவை துணைத் தலைவா் பி.ராஜவேலு, எம்எல்ஏக்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், பி.ரமேஷ், தட்சணாமூா்த்தி, லட்சுமிகாந்தன் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைத்திருந்த நேருவின் உருவப் படத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, வெ.வைத்திலிங்கம் எம்.பி., மு.வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஆா்.அனந்தராமன், துணைத் தலைவா் பி.கே.தேவதாஸ், மாநிலச் செயலா் சூசைராஜ், சேகா் உள்ளிட்டோா் நேருவின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT