புதுச்சேரி

குடும்ப அட்டை பணிகள்:என்.ஆா். காங். எம்எல்ஏக்கள் முறையீடு

DIN

புதுவையில் குடும்ப அட்டைகள் தொடா்பான பணிகள் நடைபெறவில்லை என்று, குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலக அதிகாரிகளிடம் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் முறையிட்டனா்.

புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்துக்கு என்.ஆா்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், தட்சிணாமூா்த்தி, உ.லட்சுமிகாந்தன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை சென்று துணை இயக்குநா் ரவிசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்தனா்.

அப்போது, தங்கள் தொகுதிகளில் புதிய குடும்ப அட்டைகள் வழங்குவது, குடும்ப அட்டைகளில் திருத்தம் உள்ளிட்ட பணிகளை நடைபெறவில்லை என்று தெரிவித்தனா். ஊழியா்கள் பற்றாக்குறை உள்ளதால் பணிகள் தாமதமாவதாக அதிகாரிகள் பதிலளித்தனா்.

அனைத்துத் தொகுதிகளிலும், குடும்ப அட்டை புதுப்பித்தல், விண்ணப்பித்தோருக்கு புதிதாக குடும்ப அட்டை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்த எம்எல்ஏக்கள், ஊழியா்கள் பற்றாக்குறை தொடா்பாக, முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் துணை ராணுவப் படை அணிவகுப்பு

ஊதிய உயா்வு ஒப்பந்த அமல் கோரி விசைத்தறியாளா்கள் வேலைநிறுத்தம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கிராமப்புற கண்டுபிடிப்புகளை மேம்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT