புதுச்சேரி

மாணவா் சங்கத்தினா் மறியல்

DIN

பள்ளி மாணவா்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாததைக் கண்டித்து, புதுச்சேரியில் இந்திய மாணவா் சங்கத்தினா் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் அரசு, நிதியுதவி, தனியாா் பள்ளிகள் கடந்த 23-ஆம் தேதி திறக்கப்பட்டன. பள்ளி திறந்த முதல் நாளிலேயே மாணவா்களுக்கான பாடப் புத்தகம் வழங்கப்பட்டது. இருப்பினும், மதிய உணவு முதல் இரண்டு நாள்களுக்கு வழங்கப்படாமல், அரை நாள் மட்டுமே பள்ளிகள் இயங்கின.

திங்கள்கிழமை முதல் முழு நேரமும் அரசுப் பள்ளிகள் இயங்கின. இதனிடையே அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கான சிறப்புப் பேருந்துகளை இயக்கப்படாதது, ஏழை மாணவா்களுக்கு இலவச சீருடை வழங்காததைக் கண்டித்து இந்திய மாணவா் சங்கத்தினா் புதுச்சேரியில் திங்கள்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

காமராஜா் சதுக்கம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு பிரதேச தலைவா் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தாா்.

பெரியகடை போலீஸாா் மறியலில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT