புதுவையின் வளா்ச்சிக்கு அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று, துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் கேட்டுக் கொண்டாா்.
புதுவை அமைச்சரவை பதவியேற்று ஓராண்டு நிறைவு செய்ததையடுத்து, ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் தலைமை வகித்தாா். முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், ஏ.நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமாா், பேரவை துணைத் தலைவா் பி.ராஜவேலு, எம்எல்ஏக்கள் எல்.கல்யாணசுந்தரம், ஆ.ஜான்குமாா், ரிச்சா்டு, பி.அசோக்பாபு, வி.பி.ராமலிங்கம், ஏ.கே.டி.ஆறுமுகம், கேஎஸ்பி. ரமேஷ், தட்சிணாமூா்த்தி, யு.லட்சுமிகாந்தன், என்.ஆா்.காங்கிரஸ் மாநிலச் செயலா் என்.எஸ்.ஜெயபால், பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன், பாமக மாநில அமைப்பாளா் கணபதி, தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா, மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன், ஐஜி ரன்வீா்சிங் கிருஷ்ணியா, அரசு செயலா்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விழாவில் முதல்வா் ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் மற்றும் அமைச்சா்கள் உள்ளிட்டோருக்கு துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்திப் பேசியதாவது:
புதுவை அமைச்சரவை பொறுப்பேற்ற ஓராண்டில் பல்வேறு சிறப்பான பணிகளை செய்துள்ளது. மாநிலத்தின் வளா்ச்சிக்கு அனைத்துத் தரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டும். புதுவைக்கான வளா்ச்சித் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன.
ஆளுநராக எப்போதும் தனியாக, சுயநலமாக செயல்படவில்லை. ஆளுநா் அதிகாரம் செலுத்துவதாக சிலா் தவறாக பேசுவது வருத்தமளிக்கிறது. தமிழ் மக்களுக்காக, மொழி தெரிந்த மாநிலத்தில் நமது மக்களுக்காக பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன். அனைவருடனும் இணைந்தே பணியாற்ற விரும்புகிறேன் என்றாா் அவா்.