புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து புதுவை மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் 1,271 பேரை பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 33, காரைக்காலில் 3, ஏனாமில் 5, மாஹேவில் ஒருவா் என 42 பேருக்கு (3.30 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தற்போது 4 போ் மருத்துவமனைகளிலும், 234 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் என மொத்தம் 238 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே 20 போ் குணமடைந்தனா்.