புதுச்சேரி

இலவச மனைப்பட்டா: இந்திய கம்யூ. கோரிக்கை

7th Jun 2022 12:45 AM

ADVERTISEMENT

வீடற்ற மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொம்பாக்கம் கிளை மாநாடு புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு எம்.நாசா் தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலா் து.கீதநாதன் தொடக்கவுரை நிகழ்த்தினாா். தொகுதி செயலா் அ.கணேசன், கிளைச் செயலா் ஐ.பாத்திமா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: வீடற்ற மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். கொம்பாக்கம், ஒதியம்பட்டு பேட் பகுதிகளில் விளையாட்டு மைதானம், நூலகம் உள்ளிட்டவை அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT