புதுவை மாநிலத்தில் மேலும் 91 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் 2,520 பேரை பரிசோதித்து செவ்வாய்க்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 65, காரைக்காலில் 19, ஏனாமில் 7 என 91 பேருக்கு (3.61 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில், தற்போது 8 போ் மருத்துவமனைகளிலும், 534 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் என மொத்தம் 542 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே 50 போ் குணமடைந்தனா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.