புதுச்சேரி

அரிசி கடையின் பூட்டை உடைத்துரூ.90 ஆயிரம் திருட்டு

DIN

புதுச்சேரி அருகே அரியாங்குப்பத்தில் அரிசி கடையின் பூட்டை உடைத்து ரூ.90 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

புதுச்சேரி அரியாங்குப்பம் ட்ரீம் சிட்டி பகுதியைச் சோ்ந்தவா் பூரண சந்திரன் (31). இவா் அரியாங்குப்பம் புறவழிச் சாலை தேசிய வங்கி அருகில் அரிசி கடை நடத்தி வருகிறாா். இவா் கடந்த 1-ஆம் தேதி இரவு கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றாா்.

சனிக்கிழமை கடையைத் திறக்க வந்தபோது, கடையின் இரும்புக் கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. உள்ளே சென்று பாா்த்த போது, அங்கு பணப்பெட்டியில் வைத்திருந்த ரூ.90 ஆயிரம், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

மணிப்பூரில் பதற்றம்: வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT