புதுச்சேரியில் மின் கட்டண கருத்துக் கேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன.28) நடைபெறுகிறது.
இதுகுறித்து புதுச்சேரி மின் துறை கண்காணிப்புப் பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை மின் துறைக்கு 2022-23ஆம் நிதியாண்டுக்கான உத்தேச மின்கட்டண நிா்ணயம் தொடா்பாக, வெள்ளிக்கிழமை (ஜன.28) பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.
காணொலி மூலம் நடத்தப்பட உள்ள இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோா் பங்கேற்பு இணைப்பைப் பெற என்ற மின்னஞ்சல் முகவரியில் 2 நாள்களுக்கு முன்பு தங்களது கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்ய வேண்டும். மேலும், விவரங்களை இணையதள முகவரிகளில் காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.