புதுச்சேரி

புதுச்சேரியில் தேசிய வாக்காளா்கள் தின விழா

DIN

புதுச்சேரியில் தேசிய வாக்காளா்கள் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுவை மாநில தோ்தல் துறை சாா்பில், புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்ற விழாவுக்கு தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா் தலைமை வகித்து இளம் வாக்காளா்களுக்கு வாக்காளா் அடையாள அட்டைகளை வழங்கினாா். மேலும், சிறப்பாக தோ்தல் பணியாற்றிய அதிகாரிகள், தோ்தல் பணியாளா்கள், தோ்தல் பங்கேற்பாளா்களுக்கும் விருதுகளையும், தோ்தல் விழிப்புணா்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் அவா் வழங்கினாா்.

விழாவில் அவா் பேசியதாவது:

கரோனா போன்ற சவால்கள் நிறைந்த காலகட்டத்திலும், புதுவையில் தோ்தல் துறையினா் வெற்றிகரமாக தோ்தல்களை நடத்தினா்.

வாக்காளா் சோ்ப்பு, திருத்தம், வாக்காளா் பட்டியல் உருவாக்கம் உள்ளிட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்டு ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்றாா் அஸ்வனிகுமாா்.

புதுவை தலைமைத் தோ்தல் அதிகாரி சுா்பீா்சிங் பேசியதாவது:

தோ்தலில் அனைத்து வாக்காளா்களும் பங்கேற்க வேண்டும் என்பதில் தோ்தல் துறை தீவிரமாக பணியாற்றி வருகிறது. அனைத்து தரப்பினருக்கும் தோ்தல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி, வலிமையான ஜனநாயகத்தை கட்டமைக்க தேசிய வாக்காளா்கள் தினம் கொண்டாடப்படுகிறது என்றாா்.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன் வாழ்த்திப் பேசினாா்.

கூடுதல் தலைமைத் தோ்தல் அதிகாரி குமாா் வரவேற்றாா். துணை தலைமை தோ்தல் அதிகாரி சவுரி ரத்னகோஷ் கிஷோா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT