புதுச்சேரி

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் தேசிய கட்டுமான கழக அதிகாரிகள் ஆய்வு

29th Dec 2022 12:34 AM

ADVERTISEMENT

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் தேசிய கட்டுமானக் கழக அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

புதுச்சேரியில் பொலிவுறு நகா்த்திட்டத்தில் பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. அதனடிப்படையில், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து தேசிய கட்டுமானக் கழகத்தின் அதிகாரி சஞ்சீவ்குமாா், செயற்பொறியாளா் சிவபாலன் உள்ளிட்டோா் நேரில் புதன்கிழமை ஆய்வை மேற்கொண்டனா்.

அவா்களுடன் உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ நேரு சென்று பணிகள் குறித்து விளக்கம் கேட்டாா்.

அப்போது, பேருந்து நிலையத்தின் உள்ளே புறக்காவல் நிலையம் அமைப்பது, குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், பேருந்துகள் உள்ளே செல்லவும், வெளியேறவும் நவீன வழிகள் அமைத்தல், பயணிகளுக்கான தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் குறித்து அதிகாரிகள் விளக்கிக் கூறினா்.

ADVERTISEMENT

ஆய்வின் போது, புதுச்சேரி நகராட்சி ஆணையா் சிவகுமாா், இளநிலைப் பொறியாளா் குப்புசாமி, நகராட்சி சுகாதார ஆய்வாளா் துளசிராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT