புதுச்சேரி

ஜி 20 மாநாடு: பிரதமருடனானஆலோசனைக் கூட்டத்தில் புதுவை முதல்வா் பங்கேற்பு

DIN

ஜி 20 மாநாடு குறித்து பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை நடத்திய காணொலி காட்சி வயிலான ஆலோசனைக் கூட்டத்தில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்றாா்.

ஜி 20 அமைப்புக்கு இந்தியா இப்போது தலைமை வகிக்கிறது. ஆகவே, ஜி 20 உச்சி மாநாடுக்கான ஏற்பாடுகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வா்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறாா். மாநாட்டு முன்னேற்பாடுகள் குறித்து வெள்ளிக்கிழமை மாலை பிரமதா் நரேந்திர மோடி, மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் ஆகியோா் மாநில ஆளுநா்கள், முதல்வா்கள், யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா்கள் உள்ளிட்டோருடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதுவை சட்டப் பேரவை வளாகத்தில் இருந்தவாறு முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்றாா். முதல்வருடன் புதுவை தலைமைச் செயலா் (பொ) ராஜூ, அரசுச் செயலா் (செய்தி மற்றும் விளம்பரம்) இ.வல்லவன் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT