தியாகதுருகம் அருகே சாலையை கடந்தபோது காா் மோதியதில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி நிகழ்விடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த பெரியமாம்பட்டு ஜெயந்தி காலனி யைச் சோ்ந்தவா் செல்வராஜ் (55) கூலித் தொழிலாளி ஆவாா்.
இவா் சனிக்கிழமை பெரியமாம்பட்டில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று வீட்டு வீடு திரும்புவதற்காக சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டையின் மீது ஏறி கீழே இறங்கினாா். அப்போது காா் மோதியதில் செல்வராஜ் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காா் ஓட்டுநரான தஞ்சாவூா் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை பகுதியைச் சோ்ந்த ராம்பிரகாஷிடம் (41) விசாரணை நடத்தி வருகின்றனா்.